திங்கள், 1 நவம்பர், 2010



நேற்றைய என்னை
இன்றைய நான்
வெல்லத் துடிக்கிறேன்…
நாளைய என்னிடம்
இன்றைய நான்
தோற்கப்போவது தெரிந்திருந்தும் !


 
தீப்பெட்டியென நிலையாய்
உன் நினைவு.
தீக்குச்சியாய்
உரசி உரசி எரியும் மனது!

 
ஒருமுறைதான் பிறந்தாய்
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும் பிறக்கிறேன்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக