சனி, 21 ஆகஸ்ட், 2010

உன்னை 
பார்த்த கண்ணையா...? 


உன்னை 
நினைத்த இதயத்தையா...? 


உன்னை
வரைந்த ஓவியத்தையா? 


இல்லை! 


உன் 
கனவால் 
கட்டிய கோட்டையா...? 


உன்
 நினைவால் 
எழுதிய கவிதையா...? 


உன் 
இதழால் 
சிரித்த சிரிப்பையா...? 


இல்லை! 


உன்னில் 
கலந்த உயிரையா...? 


உன்னில் 
தொலைந்த என்னையா...? 


உன்னில் 
மறைந்த காதலையா...? 

நீயே சொல்! 
எதை மறப்பது என்று...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக