ஒவ்வொரு
வார்த்தையும் ஜனனித்தது
உன்னால்
மொழியாகும்போழுது,
உன்னோடு
பேசாத
ஒவ்வொரு வார்த்தையும்
கருவறை குழந்தையாகவே
என்னுள் வளர்கின்றது
பாறையின்மேல் பெய்துசெல்லும்
மழைத்துளிபோல பயனற்று
மடிகின்றேன்,
பசுமையில்லாமல்,
உயிர்க்குளிகூட வற்றிப்போனது
உன்பார்வை,
உன்வார்த்தை,
உன்வருகை,
உதயமில்லாதபோது..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக