இன்று
இமைக்க மறுக்கின்றன
உன் பெயர் மாத்திரம்
உச்சரித்த இதழ்கள்
இன்று
மௌனித்துப் போயின!
உன்
வரவுக்காக ஓடி ஓடி
காத்திருந்த கால்களின்
நடை தளர்ந்து போயின
ஆனாலும்
உனகாகவே காத்திருக்கும்
என்
இதயம் மட்டும் இன்னும்
ஓயாமல் துடித்துக் கொண்டிருகின்றது
உன் வரவுக்காக !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக