புதன், 20 அக்டோபர், 2010

என் உள்ளங்கையில்
ஆயுள் ரேகையை
தேடிப் பார்த்த படி…

உள்ளத்தில் பொங்கியெழும்
உன் நினைவுகள் சுமந்து
மௌனங்களோடு மட்டுமே
நிமிடங்கள் கழிகின்றன!

நீ எனக்கும் தெரியாமல்
சிக்கும் எடுக்காமல்
பிய்த்துக் கொண்டு
போய் விட்டாய்!

ஏனென்றும் தெரியவில்லை
விடை காணவும் முடியவில்லை!

ம்…!
நாட்களையும் பொழுதுகளையும்
வெறுமையான பக்கங்களோடு புரட்டியபடி…

சுடும் கண்ணீரில்
கவிதைகள் எழுதி
கவிதைகளில் கப்பல் செய்து
கடல் நீரில் மிதக்க விட்டு
கண்ணீரோடு காத்திருக்கின்றேன்!

ஏதாவது ஒரு கவிதை
உன் கரம் கிடைத்து
என்றாவது ஒரு நாள்
என்னைத் தேடி
வருவாயென்ற நம்பிக்கையில்
உன் வரவுக்காய்
தினமும் என் தவமிருப்பு!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக