சனி, 30 அக்டோபர், 2010

நீ வேறு, நான் வேறல்ல
என்பதாய் வளர்ந்தது
நம் நட்பு


நினைத்துக் கூட
பார்க்கவில்லை
நீ என்னை
பிரிவாய்யென்று


என்னை நீ
மறந்ததை நினைத்து
துடித்துப் போகிறேன்!


எதை நினைப்பேன்
எதை மறப்பேன்


நான் உன்னை
சந்திக்காமலே
இருந்திருக்கலாம்


என் உயிரையும் தாண்டி
சென்று விட்டது
உன் நினைவுகள்


உன்னை மறப்பதா
என்னையே மறப்பதா
முடிவெடுக்க முடியாமல்
தவிக்கிறேன்


உன்னை மறக்க நினைத்தால்
என்னையே மறக்க செய்கிறது
உன் நினைவுகள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக