புதன், 15 டிசம்பர், 2010


காதல் 
என்ற வார்த்தையை
கேட்டு கேட்டு அதன்மேல்
என்னவோ தெரியவில்லை
ஒரு வகையறியா பாசம்!



காதலியே இல்லாமல்
காதல் கவிதையா.......?

கற்பனை கூட கடுப்பாகி
காரியுமிழ்ந்துவிடும்....



கவிதைக்காக இல்லாவிட்டாலும்
காலத்தின் ஓட்டத்தில்
என்னை கனிவோடு
காதலிக்க காதலியை
தேடிகொண்டிருக்கிறேன்..



பார்கின்ற 
பெண்ணையெல்லாம்
ஒப்பிட்டு பார்க்க்கிறேன்

கண்ணுக்குள் 
உள்ள காதலியோடு
ஒவ்வொரு ஒப்பிட்டுக்கு பின்னும்
உள்ளுக்குள்ளே சொல்லி கொள்கிறேன்...

அவளிடம்....

நீ அவள் இல்லையென்று.



1 கருத்து: