சனி, 5 ஜூன், 2010

நினைவாற்றலை
வளர்க்க விரும்பினேன்
என் நினைவுகள் உன்னை சுற்றுவதால் !

ஆகாயத்தின் மேல்
உன்னை வர்ணிக்க விரும்பினேன்
காகிதத்தின் நீளம் , அகலம் பத்தாததால் !

தேன்
சுவையானது தான்
இல்லை என்று யார் சொன்னது ?
உன் எச்சில் சுவைக்காத வரை !
பூக்களில் வரும் வாசனை அற்புதமாக
தோன்றவில்லை
உன் வாசம் கண்டதால் !

உன் சிரிப்பு
உண்மையிலேயே அழகுதான்
இல்லை என்றல் அதை பார்க்க
இவ்வளவு ஆர்வம் வருவது ஏன் ?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக