எழுதிய கவிகள்,
எல்லாமே கடலில்
இட்ட கடுகு
போன்றது...!
காதல் ஒண்ணும்,
அடைப்பு குறிக்குள்
அடைக்கும்
வார்த்தைகள்
இல்லை....!
அம்பு குறி இட்ட சிவப்பு
ஈர இதயமும் இல்லை....
அடி கோடு இட்ட
வாக்கியமும் இல்லை....
இத்துணை சொல்லி விட்டு,
நான் எப்படி விளக்குவது... காதலை?,
காதல் கொள்ளுங்கள்........
அதை யாருக்கேனும், விளங்க வைக்க
உங்களுக்கேனும் முடிகிறதா
பார்ப்போம்.....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக