ஞாயிறு, 28 மார்ச், 2010

ஒரு காதலை..,
அன்பை..,
தவிப்பை..,


நீ
ஏற்றுகொள்ளாமல் போகலாம்-ஆனால்
அலட்சியம் செய்தவள்தானே நீ!


அப்போது
என் கண்கள் பனிக்க
நெஞ்சு நடுங்க
வார்த்தைகளற்ற உலகத்தில் நின்றேன்!


அந்த கணம்
இதோ
என் கண் முன்னேவிரிகிறது


இதயதீபம்
படபடப்பான காற்றடித்து
சுடர் துடிக்கிறது
அது அணைந்துவிட கூடாதென
அத்தனை இதயங்களும் துடிக்கின்றன


என்னை
உலகமே அனாதையக்கபட்டதாய் உணர்தேன்


இத்தனை நாள்
எத்தனையோ சாத்தான்களால்
சபிக்கபட்டலும்,


இன்று மட்டும்
அத்தனை தேவதைகளாலும்
ஆசிர்வதிக்கபடுவேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக