என்
கோபத்திற்கு காரணம்
நீயா? நானா?
இதுவரை தெரியவில்லை
பிடிக்கவில்லைஎன்றே
சொல்கிறேன்
உனக்கு பிடித்தவைகள்
எனக்கு பிடித்திருந்தும்..,
உலகத்தில்
எனக்கு பிடிக்காத
ஒரே ஜீவன் நீதான் என்கிறேன்
சந்திக்கவேண்டிய சந்தர்பங்களை
தவிர்த்தேவிடுகிறேன்
உன்
நினைவுகளின் சுவடுகளை கூட
நீக்கிவிட்டேன்
இன்றைய
உறக்கத்தோடு
உன் நினைவும்
உறங்கவேண்டும் என்றே
உறங்கபோகிறேன்
-ஆனாலும்
காலை கண்விழிப்பில்
வழக்கமான விடியலாய்
உன் புன்னகை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக