விழுந்துவிடுமேன்றுதான்
விரும்பினேன்,
ஒவ்வொரு
அலையும் தேடித்தேடி
ஓய்ந்துவிடுகிறது கரையில்..,
ஒடிந்துவிடுமென்றுதான்
பயந்தேன்.
ஒவ்வொரு
நாணலும்
வளைந்து நிமிர்ந்துவிடுகிறது காற்றில்..,
கரைந்துவிடுமென்றுதான்
கருதினேன்,
ஒவ்வொரு
கல்லும்
நனைந்து காய்ந்துவிடுகிறது மழையில்..,
மறந்துவிடுவேன் என்றுதான்
நம்பினேன்,
ஒவ்வொரு
நினைவலையும்
வந்துவடுவகிறது என் மனதில்..,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக