ஞாயிறு, 9 மே, 2010

உன்னை நானும் என்னை நீயும்
காணக் கிடைக்கும் நாட்களில்…

இருவரும் சந்தித்துக் கொண்ட
முதல் நொடியில் இருந்து
நகர்கின்ற அத்தனை நொடிகளும்…

சிரித்து சிரித்து
ரசித்து ரசித்து கடந்தாலும்…

நேரமாகிப்போய் பிரிய முற்படும்
அந்த கடைசி நொடியில்…

கண்ணுக்குள் திரண்டு நிற்கும்
கண்ணீரின் துளியில்தான்
உணரப்படுகின்றது…

நம் காதலின் ஆழமும் வலியும்...,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக