வெள்ளி, 7 மே, 2010

காதல் அது ஒரு
தான்தோன்றீஸ்வரம்
தானாகவே உருவாகும்

காதல் அது சில

மோதலில் ஆரம்பமாகி
சாதலில் முடியும்

காதல் அது மிக
இரகசியமாக ஆரம்பித்து
பொது இடங்களில் திரையிடும்

காதல் அது
உள்ள உரசலில் அடைபட்டு
உடல் உரசலில் உடைபடும்

காதல் அது
சொல்லாமல் தவிக்கும்
சொல்லிவிட்டு சலிக்கும்

காதல் அது
சந்தோசத்தில் சிரிக்கும்
சந்தேகத்தால் மரிக்கும்

காதல் அது
அன்பானவர்களுக்கு அமுதம்
அழகானவர்களுக்கு ஆபத்து

காதல் அது
கனிவாக பேசி
தனிமையில் ஊமையாகும்

காதல் அது
சில்மிசம் செய்யும்
விசமும் அருந்தும்

காதல் அது
விண்ணிலும் பறக்கும்
மண்ணுக்குள்ளும் புதைக்கும்

காதல் அது
உறவுகளை உருவாக்கும்
பெற்றோர்களையும் பிரிக்கும்

காதல் அது
பலரிடம் வாழ ஆசைப்படும்
சிலரிடம் மட்டும் வாழும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக