வெள்ளி, 14 மே, 2010

நீ 
என்னை 
ஓரக் கண்ணால் 
பார்ப்பது பிடிக்கும்,


நான் பார்த்ததும் 
தாழ்த்திக் கொள்ளும் 
பார்வை பிடிக்கும்,


நான் கேட்டதும் 
நீ 
உயர்த்தும் 
இமை பிடிக்கும், 


ஆழமாக உன்னை ரசிக்கும் போது; 
நீ 
உன்னை 
இடம் மாற்றுவது பிடிக்கும் 


நீ 
மௌனமாக இருக்கும் 
நேரம் பிடிக்கும் 


நீ
என் பெயர் அழைக்கும் 
அழகு பிடிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக