நீ
என்னை
ஓரக் கண்ணால்
பார்ப்பது பிடிக்கும்,
நான் பார்த்ததும்
தாழ்த்திக் கொள்ளும்
பார்வை பிடிக்கும்,
நான் கேட்டதும்
நீ
உயர்த்தும்
இமை பிடிக்கும்,
ஆழமாக உன்னை ரசிக்கும் போது;
நீ
உன்னை
இடம் மாற்றுவது பிடிக்கும்
நீ
மௌனமாக இருக்கும்
நேரம் பிடிக்கும்
நீ
என் பெயர் அழைக்கும்
அழகு பிடிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக