சனி, 1 அக்டோபர், 2011

அழும் குழந்தையைக்கூட
அழகாய் சிரிக்கவைத்து
புகைப்படம் எடுக்க தெரிந்த
கலைஞன் நான்

எப்படி
உன் அழகான
புன்னகை மட்டும்
புரியாமல் போனது
எனக்கு

பிழையின்றி தமிழ்
எழுத தெரியாத என்னை
கவிஞனாக்கவே வந்து
தொலைத்திருக்கிறது காதல்.


செவ்வாய், 5 ஏப்ரல், 2011

அலை
நனைத்து விட்டு
போகும்
மணற்போல்,

என்றும்
உலராமலே
இருக்கும்
எனக்குள்
உன் காதல்!


எங்குதான்
கற்றுக்கொண்டதோ
என் விழிகள்!

உன்
குறும் பார்வையின்
வார்த்தைகளை
மொழிப் பெயர்ப்பதற்கு.


செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

அன்று
மழை பெய்யும் நேரங்களில்
என்னை நினைப்பதாய் சொன்னாய்!

இன்றும் 
மழை பெய்கிறது
நான் உன்னை நினைக்கிறேன் 

நீ
என்னை நினைப்பாயா?





திங்கள், 21 பிப்ரவரி, 2011

இறக்கவும் விடவில்லை,
இருக்கவும் விடவில்லை,

என்னதான் 
வேண்டுமாம்
உன் நினைவுகளுக்கு?




எத்தனை 
காதல் கடந்து வந்தாலும்

உன் 
இதயம் மட்டும் தான்
என் காதலுக்கான தாஜ்மகால்.