செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

அன்று
மழை பெய்யும் நேரங்களில்
என்னை நினைப்பதாய் சொன்னாய்!

இன்றும் 
மழை பெய்கிறது
நான் உன்னை நினைக்கிறேன் 

நீ
என்னை நினைப்பாயா?





திங்கள், 21 பிப்ரவரி, 2011

இறக்கவும் விடவில்லை,
இருக்கவும் விடவில்லை,

என்னதான் 
வேண்டுமாம்
உன் நினைவுகளுக்கு?




எத்தனை 
காதல் கடந்து வந்தாலும்

உன் 
இதயம் மட்டும் தான்
என் காதலுக்கான தாஜ்மகால்.








ஒவ்வொரு முறையும்
மறக்கத்தான் நினைக்கிறேன்
கன்னங்களில் வழியும் கண்ணீரை
துடைத்த பின்…

காதலை எந்த
வடிவில் கண்டாலும்
மறுபடியும் கண்ணீர்
வருவதை ஏன் என்னால்
தடுக்க முடிவதில்லை?


ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

கூடு திரும்பாத பறவை நீ!

கூண்டை  
கட்டி  முடிக்க கடைசி  சுள்ளிக்காகப் பறந்த  
பறவை 
கூடு  திரும்பாததுபோல 


நீ!


வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

I miss U (16-02-2011) wednesday


நாட்கள் நகர்கின்றன
வாரங்களும் ஓடுகின்றன
மாதங்களும் வழிந்தோடுகின்றன!

நினைவுப் புதையலில் மட்டும்
அள்ள அள்ளக் குறையாமல் நீ!
நகரவும் இல்லை, வழிந்தோடவுமில்லை

எல்லாமே மாறுகின்றன
என்னைச் சுற்றி...
என் மனமோ உன்னைச் சுற்றி..
அழுத்தமாய் பற்றி..!

திருவிழாக் கூட்டத்தில்
தனித்துவிடப்பட்ட தலைமகன் நான்!
தொலைத்தவள் நீ.....

தேம்பியழ வழியில்லை..
அழுது புலம்ப வகையுமில்லை!

முகம் முழுவதும் புன்னகை; ஆனால்
விரக்தியின் லேசான தீற்றலில் கண்கள்!

உள்ளங்கையில் திட ரேகைகள்; ஆனால்
உள்ளமெங்கிலும் கவலை ரேகைகள்!

நடையினில் கம்பீரம் குலையவில்லை; ஆனாலும்
நடுக்கத்தின் நாற்றாங்கால் செழிப்பாய் இருக்கிறது!

வெளிச்சமாய் வண்ணமயமாய் இருக்கிறது உலகம்!
இருளாய் மாயைகள் நிறைந்ததாய் இருக்கிறது மனவுலகம்!