என்னை
தவிர வேறு யாரையும்
நீ விரும்ப கூடாது என்பது
என் சுயநலம் தான்....
ஆனால்
என்னை
போல வேறு யாரும்
உன்னை இந்த அளவிற்கு விரும்பமாட்டார்கள்
என்பது என் நம்பிக்கை.....
முதல் முறை
உன்னை
நான் சந்தித்த நொடி எதுவென்று
இன்றுவரை எனக்கு புலப்படவில்லை......
உன்
அனுமதி பெற்ற பின்பே
என்
தாயின் கருவறை வந்தேன்
என்று சொல்லி சிரித்தாய் ஒருநாள்......
மீண்டும் உன் அனுமதி பெற்ற பின்பே கல்லறை சென்று சேர வேண்டும், சொல்லி மகிழ்கிறேன் எனக்குள் இன்று......!