வெள்ளி, 26 நவம்பர், 2010


மலரும் கற்பனைகளை 
கண்திறந்து கவிதையாக வடிக்கிறேன்.
நிமிஷங்களாக இனிக்கின்றன.


திங்கள், 22 நவம்பர், 2010

அவள் விரலுக்கு சொடுக்கு
எடுக்கும் போது
இப்படி கேட்டாள்..
உங்களுக்கு...
"காதல்..,முத்தம்..,அழகு..,
கவிதை..,
இதைதவிர வேறு எதுவும்
பேச தெரியாதா..?"என்று.

சொடுக்குவதை நிறுத்தி
"வேறு என்ன பேச உலகத்தில்
காதலை விட அழகாய் இருக்கிறது...
சரி நீ சொல்..
நான் அதை பற்றி பேசுகிறேன் என்றேன்..?!

ம்ம்ம்...ஒரு மாறுதலுக்காக
"உலக அரசியல்" பற்றி பேசுங்கள் என்றாள்.

அப்படியா..சரி
"அமெரிக்க அதிபர் ஒரு நாளில்..
அவர் மனைவியை
எத்தனை முறை முத்தமிடுவார்..?
என்றேன் கண்சிமிட்டி..

அய்யோ..கடவுளே..?! என்று
என் தலையை குட்டிகொண்டே இருந்தாள்
பிரிய காதலில்....




நீ 
என்னை காயப்படுத்திகொண்டே இருக்கிறாய்...

நானோ

உன்னை 
கவிதையாக்கி கொண்டே இருக்கிறேன்..! 



புதன், 17 நவம்பர், 2010

ன் 
நினைவுகளால் உறக்கம் தொலைத்தப் 

பல இரவுகளின்
காலப் பெருவெளியில்
இன்னும் கடந்துகொண்டிருக்கின்றேன்.




நான் ஆடை கிழிந்த
பைத்தியம் என்றுதான் எல்லோருக்கும் தெரியும்

ஆனால் 

யாருக்குத் தெரியும்
உன் நினைவுகளால் இதயம் கிழிந்த
காதலன் என்று..!



வெள்ளி, 12 நவம்பர், 2010

ஆயிரம் இழப்புகள்.... 
ஆயிரம் தோல்விகள்..... 
ஆயிரம் ஆயிரம் வலிகள் இருந்தாலும் 

நான் நானகவே 
பிறக்க விரும்புகிறேன் 

என்னவளின் அன்புக்காக..,





திங்கள், 8 நவம்பர், 2010

சின்ன சின்ன
சிணுங்கல்கள்,

பூக்களின் புன்னகைகள்,

அறியாத தவறுகள்,

தலைக்கணமில்லா ஊடல்கள்,

சில்மிஷ கூடல்கள்,

உனக்கும் எனக்குமான
ஒவ்வொரு வினாடியும்
என்னுள் புகைப்படமாய்
புன்னகைக்கிறது.



திங்கள், 1 நவம்பர், 2010


என்னை 
தவிர வேறு யாரையும் 
நீ விரும்ப கூடாது என்பது 
என் சுயநலம் தான்....

ஆனால் 

என்னை 
போல வேறு யாரும் 
உன்னை இந்த அளவிற்கு விரும்பமாட்டார்கள் 
என்பது என் நம்பிக்கை..... 

முதல் முறை 
உன்னை 
நான் சந்தித்த நொடி எதுவென்று 
இன்றுவரை எனக்கு புலப்படவில்லை...... 

உன் 
அனுமதி பெற்ற பின்பே 
என் 
தாயின் கருவறை வந்தேன் 
என்று சொல்லி சிரித்தாய் ஒருநாள்......
மீண்டும் உன் அனுமதி பெற்ற பின்பே கல்லறை சென்று சேர வேண்டும், சொல்லி மகிழ்கிறேன் எனக்குள் இன்று......!

மனதினுள் நீயும்
உயிருக்குள் உன் நினைவும்
உன் உணர்வுகளுடன்
என் உணர்வும்
இருக்கும் போது
உன்னை மறப்பது
சாத்தியமா?

சாதனைதான்!!!
சிரிக்க மட்டுமே தெரிந்த
என் இதயத்திற்கு
தவிக்கவும்
கற்று கொடுத்து விட்டாயே..
தினம் தினம்
ஒரு கவிதை எழுதுகின்றேன்
அதில் உன் நினைவுகளை தான்
தினமும் எழுதுகின்றேன்..

உன்னோடு வாழ்ந்த
காலங்களை விட
இன்று உன்
நினைவோடு வாழ்ந்த
காலங்கள் அதிகமாகிறது
தேடினேன் தேடினேன்
என் ஜீவன் தேயும் வரை
தேடினேன்..

ஆனாலும் -நீ
கிடைக்கவில்லை
உன்னை தேடும் விழிகளுக்கு
தினமும் ஏமாற்றங்கள் தான்
கிடைக்கின்றன
உன் பிரிவினால்!.






நேற்றைய என்னை
இன்றைய நான்
வெல்லத் துடிக்கிறேன்…
நாளைய என்னிடம்
இன்றைய நான்
தோற்கப்போவது தெரிந்திருந்தும் !


 
தீப்பெட்டியென நிலையாய்
உன் நினைவு.
தீக்குச்சியாய்
உரசி உரசி எரியும் மனது!

 
ஒருமுறைதான் பிறந்தாய்
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும் பிறக்கிறேன்!