தொலைந்து போன
என் இதயத்தினுள்
தொலையாத நம்காதலால்
தினம்
தொலைத்து கொண்டிருக்கிறேன்
என் இரவுகளை,
அதில் தேடிக்கொண்டிருக்கிறேன்
அதன் கனவுகளை,
நாம் பிரிந்தபிறகும்
பிரியாத என்காதலால்
பிரிக்க முடியாத
நினைவுகளுக்குள் சிக்கி
தினம் தினம்
பிரியாவிடை கொடுத்து
மீள்கிறது என்உயிர்,
இமை மூடாமலேயே
இரவுகள் என்னை
விரட்டுகிறது விடியலுக்கு,
உணர்ச்சியற்ற விழிகளில்
கண்ணீர்த்துளிகள் கூட
எதிர்பார்ப்புடன்
ஒரு துளியையேனும்
உன் கரம்
தாங்காத என்று,
ஓடி ஒழிக்கிறேன்
அங்கும் இங்கும்,
என்ன செய்வது
உயிருக்குள் ஒலிக்கும்
கேள்விகளிடம் இருந்து
தப்பிக்க வழிதெரியவில்லை,
இருந்தும்
சுகமான சுமைகளாக
சுமக்கிறது
என் இதயம்
உன்னை அல்ல
உன் நினைவுகளை...,
ஞாயிறு, 16 ஜனவரி, 2011
வியாழன், 6 ஜனவரி, 2011
இரவுகளின் நீளத்தோடு
இதயத்தின் வழியும்
இப்போது
நான் உணருகிறேன்,
கண்களில்
சிறகடித்த கனாக்கள்
கனவுகளாகவே போக
என் இதயம்
இரத்தக்கண்ணீர் வடிக்கிறது,
உறங்க மறுத்த
உள்ளம் - ஓராயிரம்
உள்ளக் குமுறலை
உதிர்த்து கொண்டிருக்க
நிம்மதி
தொலைதூரம் தொலைந்துபோனது,
விழிகளை
திறந்தாலும் முடினாலும்
கடந்துசென்ற நினைவுகள்
என்னை
காயப்படுத்தி செல்கின்றன,
பாசம்வைத்த இதயங்களுக்கு
பிரிவுகளும் கண்ணீரும்தான்
காலத்தின் சன்மானமா?.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)